கோவை சரவணம்பட்டி அல்கெமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற கிராண்ட் காலா நிகழ்ச்சியில்,நாற்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்ட கண்காட்சி நடைபெற்றது. நவீன தொழில் நுட்பம்,ஆன்லைன் வணிகம் என வர்த்தகம் ஒரு புறம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், வணிகம் சார்ந்த வளர்ச்சி வேகமெடுத்து வருகின்றது.இந் நிலையில் பள்ளியில் பயிலும் போதே வணிகம் சார்ந்த துறையை மாணவ,மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள அல்க்கெமி பப்ளிக் பள்ளியில் கிராண்ட் காலா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் ஒரு நாள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், பி.பி.ஜி குழுமத்தின் தலைவர் டாக்டர் L. P. தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு அவர்கள் மற்றும் அறங்காவலர் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அக்ஷய் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களையும் பெற்றோர்களையும். பாராட்டி ஊக்கப்படுத்தினர்.பள்ளியில் முதல் முறையாக நடைபெற்ற கிராண்ட் காலா நிகழ்ச்சியில்,
மாணவ,மாணவிகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு,சிறு வணிக திருவிழாவையே பள்ளியில் நடத்தி உள்ளனர். பெற்றோர்கள் தாங்கள் தயாரித்த உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், கைவினைப்பொருட்கள், புத்தகங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், மரச்சாமான்கள், ஆடைகள், விளையாட்டுப் பொம்மைகள், வண்ண மீன் விற்பனை நிலையங்கள், மூலிகைச் செடி விதைகள், ஜோதிட நிலையம், சமையல் மசாலா பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதனால் குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் வணிக திறமையை கண்டு வியந்தனர்.அதே போல மாணவ,மாணவிகளும் தங்களது பொருட்களக விற்பனை செய்வதில் போட்டி போட்டு வணிகம் செய்தனர்..இவ்விழாவில் மாணவர்களின் உதவியோடு குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் வைக்கப்பட்டு அதற்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.இதில் 600-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்..இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு வருங்காலத்தில் தங்களை சிறந்த தொழிலதிபராக உருவாக்கிக்கொள்ள வழிகாட்டும் வண்ணம் அமைந்த்தாக பள்ளியின் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
-சீனி போத்தனூர்.