தாம்பரம் மாநகராட்சியின் பகுதியை சார்ந்த சில தன்னார்வலர்கள் அங்கு புதிய ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி.அழகுமீனா இ.அ.ப. அவர்களை சந்தித்து தாம்பரம் மாநகராட்சி பகுதியின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் அந்த மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை சமர்ப்பித்தார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் ஒரு மணி நேரம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆணையர் அவர்கள் முக்கியமான, மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து ஒவ்வென்றாக நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார். இந்த பகுதி மக்களின் ஒத்துழைப்போடு நம் மாநகராட்சியின் தரத்தை உயர்த்த முடியும் என்றும் நம்பிக்கையளித்தார்.
தொடர்ந்து மாநகராட்சியின் செயல்பாடுகளை மக்களாகிய நாம் கண்காணித்து தாம்பரம் மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு மக்களுக்குச் சேவை வழங்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று அங்கு கூடியிருந்த தன்னார்வலர்கள் உறுதியளித்தனர்.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.