பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு..!
பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, திங்கள்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன்காரணமாக, வங்கக்கடலில் பலத்த காற்று வீசி வருவதால் தமிழக தென்கடலோர மீனவர்கள் கடலுக்குச் செல்ல கடந்த இரண்டு நாள்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடியில் இருந்து வேல்முருகன் .