கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் ஒன்றியம் மளவராயநத்தம் அருகில் 13ஆம் நூற்றாண்டு சார்ந்த மிக பழைமையான அறம் வளர்த்த நாயகி ஆலயம் உள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பழைமையான ஆலயத்தில் மழை காலஙகளில் ஆலயத்தின் உள்ளே மழை தண்ணிர் அப்படியே ஒழகி வருகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் ஆகம விதி படி இல்லாமல் மற்ற வெளியில் உள்ள சாமி சிலைகள் ஆலயத்துக்கு உள்ள தற்காலிகமாக உள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய பஸ் வசதிகள் அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. சாமி களுக்கு செய்கின்ற அபிஷேகம் தண்ணிர் ஆலயத்தில் உள்ள தேங்கிவிடுகிறது. அம்மன் சன்னதி கட்டிடம் ஒருபகுதி சரிந்து வருகிறது.
பழைமையான ஆலயம் சரியில்லாத காரணமாக மணல் சிவன் சாமி மீது விழுந்து வருகிறது. இந்த அறம் வளர்த்த நாயகி தென்னக்கர் சாமி திருக்கோயில் சீரமைத்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நம் நாகரிகமும், பண்பாடும் கோயில்களை மையமாக வைத்தே வளர்ந்திருக்கின்றன. அரசர்களால் கட்டியெழுப்பப்பட்டு, இயற்கை சீற்றங்களையும் படையெடுப்புகளையும் தாங்கி பலநூறு ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பழம் பெருமை மிக்கக் கோயில்களை நாம் உரிய முறையில் பாதுகாக்கிறோமா என்றால் வேதனை தான் விடையாக மிஞ்சுமுனியசாமி
இந்த நிகழ்வுகளில் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் பொது செயலாளர் ந. பாலசுப்பிரமணியம், மாவட்ட மாநகர தலைவி சி. சசிகலா , மாவட்ட தலைவர் அகஸ்டின் மாவட்ட பொது செயலாளர் தொம்மைராஜ் , மாவட்ட பொருளாளர் அந்தோனி , மாவட்ட இளைளுரனி கார்த்திக் மாவட்ட ஒன்றியம் கபிரியேல் கலந்து கொண்டனர்.
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.