புதிதாக பிறந்துள்ள 47 வரையாடு குட்டிகள்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் அமைந்திருக்கும் இரவிகுளம் தேசிய பூங்கா கடந்த ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் வரையாடு இனப்பெருக்கத்திற்காக பூங்காவனது அடைக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அன்றிலிருந்து இன்று வரை சுமார் 47 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதாக வனபாதுக்கப்பு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தேசிய பூங்காவனது ஏப்ரல் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நபருக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாகன வசதிகளோடு கூடி சுற்றியுள்ள பகுதிகளை காண வனத்துறை அனுமதிப்பார்கள். கடந்த ஆண்டு சுமார் 127 குட்டிகள் பிறந்ததாகவும் இந்த வருடம் அதிகமான குட்டிகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரியான கால சூழ்நிலைகளில் மாத்திரமே பிறக்கும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்பொழுது சுற்றுலா தளமான மூன்று பகுதியில் விலங்கினங்கள் வாழ சரியான இயற்கை சூழல் மற்றும் ஏற்ற கால சூழ்நிலைகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதிகமான உரையாடக் குட்டிகள் பிறந்தால் இயற்கை அழகை காண வரும் சுற்றுலா பயணிகள் பல பிரமிக்கத்தக்க சுற்றுலா தளங்களையும் விலங்கினங்களையும் காண முடியும் என்பதில் ஐயமில்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்,