போலியான லிங்க்கால் போட்டதெல்லாம் போச்சே!! நூதனக் கொள்ளையால் பணத்தை இழந்த சோகம்!!!

கோவை சரவணவணம்பட்டியை சேர்ந்தவர் 46 வயதான சசிக்குமார், இவர் அந்த பகுதியில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். சசிகுமார் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார், இந்நிலையில், அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரிவார்டு பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுமாறு தெரிவிக்கப் பட்டிருந்தது, இதனை உண்மை என நம்பிய சசிகுமார் லிங்க்கை அழுத்தினார், பின்னர் அதில், மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து, தனது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டார், சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஓடிபி எண் வந்தது. அதனையும் பதிவு செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து 8 கட்டங்களாக ரூ. 9 லட்சத்து 24 ஆயிரத்து 188 பணம் நூதனமாக எடுக்க பட்டது இதனால் அதிர்ச்சியடைந்த சசிக்குமார் வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது, யாரோ மர்ம நபர் போலியான லிங்கை அனுப்பி நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சசிக்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp