வால்பாறையில் பள்ளி மாணவர்களின் அவல நிலை! சரியான அளவில் பேருந்துகள் இல்லாததால் படியில் தொங்கிய படியே செல்லும் காட்சிகள்!!

வால்பாறையில்

வால்பாறையில்

வால்பாறையில் பள்ளி மாணவர்களின் அவல நிலை!
சரியான அளவில் பேருந்துகள் இல்லாததால் படியில் தொங்கிய படியே செல்லும் காட்சிகள்!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியை சுற்றிலும் நிறைய எஸ்டேட் பகுதிகள் உள்ளன. அவ்வாறு உள்ள எஸ்டேட் பகுதிகளில் இருந்து தினமும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மாணவர்களும் மாணவிகளும் பேருந்தின் மூலம் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வந்து செல்லும் மாணவ மாணவிகளுக்கு போதிய அளவு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் கூட்ட நெரிசல் மிகுதியால் படியில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் எவ்வளவு தான் சொன்னாலும் அவர்கள் உள்ளே வருவதில்லை. இதனால் ஏதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பயந்து போய் உள்ளார்கள். இதற்காக அவர்கள் பலமுறை அரசாங்க அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக வால்பாறை அக்கா மலை எஸ்டேட் பகுதியில் இருந்து வரும் பேருந்துகளில் மாணவ மாணவியரின் கூட்டம் அதிக அளவு உள்ளது.

எனவே இதுபோன்று கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் அதிகப்படியான பேருந்துகளை இயக்கி மாணவ மாணவியருக்கு தகுந்த பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp