99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது..!!
கோவை மாவட்டம்: கோவை மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின் படி நோய் பரவலை தடுக்கும் விதமாக இன்று ( 15/2/2003 ) ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள ஒன்றாவது வீதி முதல் ஒன்பதாவது வீதி வரை கொசு மருந்து அடிக்கப்பட்டது.
வெள்ளலூர் குப்பை கிடங்கில் உருவாகி வரும் மலேரியா கொசுக்கள் மற்றும் ஈக்கள் போத்தனூர் பகுதியான ஸ்ரீராம் நகர், அன்பு நகர் அருள்முருகன் நகர், ஈஸ்வர் நகர் பகுதிகளில் கடந்த நாட்களாக அதிக அளவில் காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்ததோடு நோய் பரவலை ஏற்படுத்தி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பெயரில் சூப்பர்வைசர் வெள்ளிங்கிரி தலைமையில் குழு ஒன்று அமைத்து ஈக்கள், கொசுக்களை தடுக்கும் விதமாக இன்று 9 வீதிகளுக்கும் சிறந்த முறையில் பத்து மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர் -ஈசா