ஆறுமுகநேரியில் பரபரப்பு…! டிரான்ஸ்பார்மரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை!!

ஆறுமுகநேரியில் பரபரப்பு..! டிரான்ஸ்பார்மரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள பேயன்விளை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் தாமஸ்துரை (25) லாரி டிரைவர். இவருக்கு நேற்று மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த தாமஸ் துரை, தனது வீட்டின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி, மின் வயரை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp