NALAIYA VARALARU
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம்!!!
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு கோயில்களில் திருமணம் நடத்தப்படும்.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சிவன் கோவிலில் வைத்து இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நேற்று 25வது இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 50,000 மதிப்பிலான சீர்வரிசை திருமாங்கல்யம் 4 கிராம், மாலை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், , மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த திருமண விழாவில் தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழ உறுப்பினர் ரா. மும்மூர்த்தி , தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.சங்கர், ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் அ. இளையராஜா , ஒட்டப்பிடாரம் சரக ஆய்வளார் திருமதி. ப.முப்பிடாதி என்ற திவ்யா மற்றும் திருக்கோயில் பணியாளர் சண்முகராஜ், ஆறுமுகவள்ளி , திருக்கோயில் அர்ச்சகர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.