உக்கடம் அருகே லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் – மாயமான லாரி உரிமையாளரை தேடி வரும் காவல்துறையினர்!!

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் அருண், அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க பட்டு வருகின்றது, இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று கோவை மாநகர், பகுதிகளில் காவல் ஆய்வாளர், விவேகானந்தன் தலைமையில் ஒரு குழுவாகவும், காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியே வாகன சோதனை செய்த போது உக்கடம் முதல் செல்வபுரம் சாலையில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒரு லாரியை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ வீதம் 60 மூட்டையில் என மொத்தம் 3000 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்து விசாரணை செய்த போது தெற்கு உக்கடம் அண்ணா நகரை சேர்ந்த அபி என்கின்ற அபிப் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரிய வந்தது. அபி என்கின்ற அபிப் ரஹமான் தலைமறைவாகியுள்ளார் இவர் ஏற்கனவே எட்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துள்ளார், அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

நாளைய வரலாறு செய்துகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp