ஒட்டப்பிடாரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா!!!

ஒட்டப்பிடாரத்தில்

ஒட்டப்பிடாரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கி தாய்மார்களிடம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சண்முகையா அவர்கள் பேசியது:

தமிழக முதல்வரின் முன்னோடி திட்டமான ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெறுகிறது. 0 முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளில் கடுமையான எடை குறைவான குழந்தைகளை RBSK குழ மூலம் வயதுக்கேற்ற எடை, வயதுக்கேற்ற உயரம் இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பரிசோதித்ததில் நமது ஒட்டப்பிடாரம் வட்டராத்தில் 111 கடுமையான எடை குறைவான குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குழந்தைகளின் எடையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலமாக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் 1 மாதத்திற்கு தேவையான பேரீச்சைபழம், புரோட்டீன் பவுடர், நெய், இரும்புச்சத்துக்கள் டானிக், மாத்திரை, கப், கைத்துண்டு ஆகியவை அடங்கி உள்ளது.

திட்ட அலுவலர் திலகா அவர்கள் பேசியது;

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது பின்னர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி திலகா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே 914 ஊட்டச்சத்து பட்டங்கள் விலை ரூ.18,28,000 மதிப்பீட்டில் வழங்ப்பட்டுள்ளது. அதில் நமது ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிக்கு 111 ஊட்டச்சத்து பெட்டகத்தின் மதிப்பு ரூ.2,22,000.

ஒரு ஊட்டச்சத்து பெட்டகத்தின் விலை ரூ.2000.

ஒட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் அவர்கள் பேசியது:

மாண்புமிகு முதல்வர் விதி 110 அறிவிப்பு கீழ் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் இதில் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் வகையில் குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது நிச்சயம் உங்கள்குழந்தைகளின் எடை மற்றும் உயரம், ஆரோக்கியம் கிடைக்கும் தாய்மார்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp