ஒட்டப்பிடாரத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உட்பட்ட ஆரைக்குளம் பகுதியில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டப்பட்டது.
இந்த விழாவிற்கான தலைமை விருந்தினர் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பெண்களுக்கு கயிறு இழத்தல் போட்டி தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல் நடைபெற்றது, இதில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர் திலகா அவர்கள் மகளிர் தினம் சிறப்பு மற்றும் பெண் குழந்தை நலன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து மகளிர்க்கு உமா ஜூவல்லரி சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் ஆரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி செல்வம் , லோகஸ்வரன் மணியாச்சி போலிஸ் துணை சூப்பிரண்டு, வழக்கறிஞர் அதியக்குமார் உமா ஜூவல்லரி உரிமையாளர் ராம்குமார், சரவணராஜா உமா ஜூவல்லரி மார்க்கெட்டிங் மேனேஜர் சுப்பராஜ், ஊராட்சி செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.