பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி வால்பாறை சாலையில் அமைந்துள்ளது ஆழியார் கவியருவி. இந்த அருவியில் குளிக்க தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். வார இறுதி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கவி அருவியை பார்த்து தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது ஆங்காங்கே உள்ள சிறு அருவிகளும் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. கடும் வறட்சி காரணமாக பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவி அருவி கடும் வறட்சியை சந்தித்து வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் கூறுகையில் ஆழியாறு கவி அருவியில் நீர் வராதது வருத்தமாக இருந்தாலும் அங்கு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும் கம்பிகளுக்கு பதில் மரக்கட்டைகளை வைத்து கட்டி வைத்துள்ளதாகவும் மழை காலங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளாதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.