கிணத்துக்கடவு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!!

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!!

கிணத்துக்கடவு அருகே மனைவியுடன் தகராறு செய்த ஒர்க் ஷாப் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது (49)) இவர் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி(44) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாராயணசாமி மது குடிக்கும் பழக்கம் உள்ளது இதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் நாராயணசாமி குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது துப்பட்டாவால் நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் நாராயணசாமியின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp