கோவையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மாணவர்கள் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் மற்றும் மருத்துவ முகாம்!!
கோவை மாவட்டம் – கோயம்புத்தூர் நகர பகுதி ராஜவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் உலக மகளிர் தினம் கொண்டாடினர் மேலும் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரு ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் (DIED பிரின்ஸ்பல்) மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் ஒண்டிப்புதூர்.
அவர்களும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தலைவர் திரு முருகேஷ் (CRT Supervisor) அவர்களும் வந்திருந்தனர் இவர்களுடன் முனைவர் உமாதேவி அவர்களும் பேராசிரியை Dr.சசிகலா அவர்களும் பங்கேற்றனர்.
மேலும் விழாவில் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் சிறப்பு பற்றி முனைவர் உமாதேவி அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டது:-
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உலக மகளிர் தினமான இன்று இந்த விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மேலும் மருத்துவ முகாமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் என்னும் அரசின் திட்டம் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அது என்னவென்றால் எழுத்தறிவு இல்லாத வயது முதிர்ந்தவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை எழுத்துக்களை அறிந்து கொள்ளும்படி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.இது அரசின் இல்லம் தேடி கல்வித்திட்டம் போன்று வயது முதிர்ந்த எழுதப்படிக்க தெரியாதவருக்காக அரசு கொண்டுவந்துள்ள திட்டம் ஆகும்.
அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் அவர்களது பக்கத்து வீட்டிலும் அவர்கள் வீட்டிலும் உள்ள முதியவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்.
ஒவ்வொரு மாணவரும் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய பெயர் விலாசம் புகைப்படம் உள்பட விபரங்களை பட்டியலிட்டு அரசுக்கு தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் மாலை வேளையிலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் மாணவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு பயிற்றுவிப்பார்கள்.
தினமும் வருகை பதிவேடு முறையில் அவர்களது வருகையை கணக்கிட்டு யாரும் விடுபடாமல் முழுமையாக கலந்து கொண்டு இந்த திட்டத்தின் மூலம் எழுத்துக்களை தெரிந்து கொள்ள செய்ய வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எழுத்தறிவு இல்லாதவர்களே இல்லை என்னும் இலக்கை அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
வயதானவர்கள் வெளியே செல்லும் பொழுது தான் செல்ல வேண்டிய ஊர் மற்றும் பேருந்தும் எண் ஆகியவற்றையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான சம்பளமும் வழங்கப்பட மாட்டாது மேலும் அவர்கள் அவர்களது வீட்டு அருகே உள்ள வயதானவர்களுக்கு தான் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் எனவே அவர்கள் இதற்காக எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை ஆனால் அரசின் மூலம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இந்த சான்றிதழானது மாணவர்களின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற உதவியாக இருக்கும்.
இது அரசின் திட்டம் என்பதால் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் தான் இந்த திட்டம் செயல்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து கூடுதல் இயக்குனர் வந்து தான் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் என்றும் நம்மிடம் கூறினார். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் வயது முதிர்த்த பெரியவர்கள் வெளியே சென்று படிக்கத் தெரியாமல் அல்லல்படும் சூழ்நிலை மாறினால் நமக்கு மகிழ்ச்சியே!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.