கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா தொற்று!

கோவை மாவட்டத்தில்

கோவை மாவட்டத்தில்

கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா தொற்று!

கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த கொரோனா பரவல் அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 462 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியானது.

இதில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கோவையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 637 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 2618 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக கோவையில் 68 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp