சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி 2 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நிகழ்ச்சியில் 15-க்கு மேற்பட்ட பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் செல்போன் பற்றிய நன்மை,தீமைகள் யோக கலை , சிலம்பம் குறித்து எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் செ. ராஜூ அவர்கள் சிறைப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்களின் முன்னிலையில் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மற்றும் விளாத்திகுளம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் விரபாண்டி கோபி என்ற அழகரி , மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் அவர்கள் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.