சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!
கோவை தெற்கு மாவட்டம் சிறுபான்மை துறையின் சார்பாக இன்று 16/03/2023 காலை
காலை 10 மணி அளவில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வரலாறு காணாத வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசை கண்டிக்கும் விதமாக மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை சிறுபான்மை துறை மதுக்கரை ஒன்றிய தலைவர் சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மை துறை மாநில தலைவர் Dr.J அஸ்லாம் பாஷா கலந்து கொண்டார். மாவட்டத் தலைவர் பகவதி கோஷங்கள் எழுப்பி துவங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை பிரிவு தெற்கு மாவட்ட தலைவர் முகமது ஹாரூன், சர்க்கிள் காங்கிரஸ் தலைவர் இஸ்மாயில் கலந்துகொண்டு கண்டன குரல் எழுப்பினார்கள். மாவட்ட பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் வட்டார தலைவர்கள், சர்க்கிள் தலைவர்கள், டிவிஷன் தலைவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிலிண்டர் எரிவாயு ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சிலிண்டரை ரோட்டில் வைத்து பெண்கள் கண்ணீர் மல்க கும்மி அடித்தது தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா. பிலால்.