NALAIYA VARALARU
சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்! விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த நபர்கள் கைது!!
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், இ. கா. ப. , அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சிந்தாமணிபுதூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பாம்போலா சதா மகன் தில்சனாத் சதா (30) மற்றும் ராம் வினோ சதா மகன் ராஜ்குமார் (29)ஆகிய 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 35, 000/- மதிப்புள்ள 4. 950 கிலோ கிராம் எடைகொண்ட 880 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.