ஜனநாயகத்தின் கருப்பு நாள் தான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்! – வைகைச் செல்வன் குற்றச்சாட்டு!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாள் பொது கூட்டம் நடைபெற்து. கூட்டத்தில் கலந்து கொண்டு வைகைச் செல்வன் அவர்கள் பேசியது:
“ஈரோடு கிழக்கு தேர்தல் இந்தியா வரலாற்றில் ஒர் கருப்பு நாள் . மக்களை ஆடு,மாடுகளைப் போல அடைத்து வைத்திருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? , இதுதான் ஜனநாயகமா?
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள் என்றால் அது மிகையாகாது. இவர்கள் இருவரும் கட்டிக்காத்த அதிமுக-வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்தவர் அம்மா. திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்களைக் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.”
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடம்பூர் ராஜு அவர்கள் பேசியது:
“ஈரோட்டில் மக்களை அடைத்து வைத்து புதிய ஃபார்முலாவை உருவாக்கியுள்ளனர் தமிழக வரலாற்றில் இதுவரை காணாத வகையில் மாதிரி தேர்தலை நடத்தி விட்டது விடியல் அரசு மக்களாட்சி முறைமையையே குழிதோண்டிப் புதைக்கும் ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்குதான், தற்போது உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது.”
இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் இலக்கிய அணி செயலாளர் முனைவர் வைகைச்செல்வன், தலைமை கழக பேச்சாளர் குமுத பெருமாள், விளாத்திகுளம் சின்னப்பன், ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா,ஒன்றிய கழக செயலாளர் போடு சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜய பண்டியன் அவர்கள் (கோவில்பட்டி பெரு நகர செயலாளர்) ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்விழாவில் 800 க்கு மேற்பட்ட பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.