திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய 7ஆவது குற்றவாளி கைது!! காவல்துறையினரின் அதிரடி வேட்டை!!!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய 7ஆவது குற்றவாளி கைது!! காவல்துறையினரின் அதிரடி வேட்டை!!!

திருவண்ணா மலையில் ஒரே நாளில் 4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை தொடர்பாக அரியானாவை சேர்ந்த கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 72,50,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் சிக்கிய நிலையில், கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு, கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களை நோட்டமிட்ட காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்தன.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த கும்பலே இந்த கொள்ளையை நிகழ்த்தியிருப் பதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இந்த கும்பல், ஆந்திரப்பிரதேசம் வழியாக கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதிக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார், கேஜிஎஃப் பகுதியில் குற்றவாளிகளை தங்கவைத்த நபரை கைது செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலம் மேவாத் பகுதியை சேர்ந்த ஆசிப் மற்றும் ஆசாத் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிடிபட்ட குற்றவாளிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களின் விபரங்களையும் தெரிந்து கொண்டு அவர்களையும் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்.

இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய ஹரியானாவை சேர்ந்த வாஹித்(வயது 36) என்பவன் அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டம் சோனாரி என்ற இடத்தில் காவல்துறையின் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டார்.

காவல்துறையினரின் அயராத முயற்சியினால் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp