நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் இருந்து பேட்டரி திருடிய வாலிபர் கைது!!
கோவை மாவட்டம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜவஹர்லால். அப்பகுதியில் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்துள்ளார். இவரது லாரியிலிருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜவஹர்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அவரது நண்பர்களுடன் அங்கு விரைந்து சென்று பார்த்தபொழுது 3 நபர்கள் லாரியில் இருந்து பேட்டரியை திருடிக் கொண்டு இருந்தனர். இதை அடுத்து அவர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார் மற்ற இரண்டு நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். மற்றும் திருட்டு சம்பந்தமான நபரை காவல்துறை விசாரணையில் மேற்கொண்டு வருகிறார்கள். இவர் கரும்புக்கடையைச் சேர்ந்த ரிஸ்வான் என்பது தெரியவந்தது. தனது நண்பர்களான முகமது ஷரீஃப். அப்சல் ரகுமான் ஆகையருடன் சேர்ந்து லாரியில் பேட்டரியை திருடியதற்காக காவல்துறை கைது செய்து மேலும் தப்பியோட இரண்டு நபரை தேடி வருகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் வாகனங்களை குறி வைத்து திருடும் நபர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் காவல்துறையினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.