பாரதிய ஜனதா கட்சி சார்பில் தரவு மேலாண்மை பிரிவு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு இணைந்து கோவையில் தாமரை முகாம்!!
கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மற்றும் தரவு மேலாண்மை பிரிவும் இணைந்து தாமரை முகாம் நேற்று நடந்தது.
ஆனைமலை மேற்கு மண்டலத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவின் மாநில செயலாளர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் முதல் முறையாக கோவை தெற்கு மாவட்டத்தில் தாமரை முகாம் ஆயுஷ்மா பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு தொடர்பு கொண்டு ஒரே நேரத்தில் 14 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
தொண்டாமுத்தூர், செல்வபுரம், மாவுத்தம்பதி, எட்டிமடை, செட்டிபாளையம், நல்லட்டிப்பாளையம், தாமரைக்குளம், கோவில்பாளையம், கக்கடவு, கப்பலாங்கரை, தேவனாம்பாளையம், செங்குட்டைபாளையம், ஆனைமலை மேற்கு, ஆனைமலை தெற்கு போன்ற இடங்களில் நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் துவங்கி வைத்தார் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் திரு வசந்த ராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்தனர் மேலும் இதில் தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் மண்டல தலைவர் திரு வெள்ளியங்கிரி OBC அணியின் மாவட்ட தலைவர் திரு கனகசம்பத் மற்றும் இரு பிரிவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த முகாம் தமிழகத்தில் முதல் முறையாக கோவை தெற்கு மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.