மதுரையில் காவல்துறை தடையை மீறி NIAவைக் கண்டித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!
கடந்த 05/03/2023 அன்று மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரை ஒன்றிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சுய நினைவை இழந்த முகமது அலி ஜின்னாவை வலிப்பு நோய் (பிட்ஸ்) வந்துவிட்டதாகக் கூறி NIA அதிகாரிகள் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிகழ்வைக் கண்டித்தும், மதுரை மாநகர் காவல்துறை, ஒன்றிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மதுரை வடக்கு மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையின் தடையையும் மீறி நேற்று மாலை நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பொறியாளர் பக்ருதீன் அலி அகமத் தலைமையேற்றார். மாநிலச் செயலாளர்கள் சிக்கந்தர், ஜபருல்லா, ஐக்கிய சமூகநீதிப் பேரவையின் சேக் தாவூத் (எ) அனீஸ், மாவட்டச் செயலாளர் அக்பர், மாவட்டப் பொருளாளர் அயூப்கான் (எ) பாட்டையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தெற்கு மாவட்ட ஊடக அணி செயலாளர் ரஜின் இறை வசனம் ஓத, தெற்கு மாவட்ட செயலாளர் தாஜ்தீன் கண்டன கோசம் எழுப்பினார். தலைமைக் கழக பேச்சாளர் ஜாகிர் உசேன், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செ.வாஞ்சிநாதன், தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் பிஸமில்லாகான், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் பிலால்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த, மாவட்ட துணைச் செயலாளர் பீர் முகம்மது நன்றியுரை நல்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளைக் கழகங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
– மதுரை வெண்புலி.