மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குமரி காவல்துறையினர்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மாநிலத்திருந்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D. N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நேரில் சென்று அங்குப் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்கள் மொழியிலயே கலந்துரையாடி பேனர் வைத்து,சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி குறித்தும் மற்றும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மேற்படி காவல் அதிகாரிகள் பேசுகையில், தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் இருக்கிறார்கள் என்றும் நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை எனவும் , உங்கள் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் தமிழக காவல்துறை உள்ளது எனவும் , மேலும் உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு பணிபுரியுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

-L. இந்திரா, வீரபாகு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp