மின் சிக்கனம் தேவை இக்கனம் பொதுமக்களுக்கு மட்டும் தானா?
வால்பாறை நகரில் பகலில் எரியும் தெரு விளக்குகள்!!!
வால்பாறை நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் தற்போது இந்த தெருவிளக்குகள் பகல் நேரங்களில் எரிந்து மின்சாரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பகல் நேரங்களில் எரியும் இந்த தெரு விளக்குகள் சில சமயங்களில் இரவு நேரம் எரிவதில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை காமராஜ் நகர்,துளசிங்க நகர், பி ஏ பி காலனி , தீயனைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சூழ்நிலைை நிலவுகிறது. இது பற்றி வால்பாறை நகராட்சி மின் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.