வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆனைமலை காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட
சுந்தரபுரி ஹர்ஷினி டெக்ஸ்டைல்ஸ் மில்லில் வேலை செய்து வரும் அசாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் மத்தியில் நிலவி வந்த அச்சத்தை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்திட ஆனைமலை காவல்துறை சார்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.முருகவேல் தலைமையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மில்லுக்கு நேரடியாக சென்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் முன்பு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் அவர்களிடம் தற்போதைய சூழ்நிலை குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பெரும்பாலான வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் காவல்துறையினர்
வடமாநிலத்தைச் சேர்ந்த தமிழ் மொழி தெரிந்த புல்லாங்குமார் என்பவரின் உதவியோடு ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்து அவர்களின் பாதுகாப்பையும் மன தைரியத்தையும் உறுதி செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதே போன்று கருப்பம்பாளையம் பிரிமியர் மில்லில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் மொழி பெயர்ப்பாளர் நிஜாம் அவர்களின் உதவியோடு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்பு அவர்களுக்கு ஆனைமலை காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை வழங்கி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் காவல் நிலையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி வட மாநிலத் தொழிலாளர்களின் அச்சத்தை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.