வாகனம் நிறுத்துவதில் தகராறு டிரைவருக்கு கத்தி குத்து??
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதி பெரிய பாறை ஜீப் ஸ்டாண்ட் அருகில் அய்யாத்துரை என்பவர் மூன்று சக்கர வாகன மெக்கானிக் செட் நடத்தி வருகிறார். செவ்வாய் கிழமையன்று செட்டுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி சென்றதால் வாகனத்தை மாற்றி நிறுத்த கூறியுள்ளார் அய்யாத்துரை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனிடையே வாக்குவாதம் ஏற்பட பெரியவர் என்று பாராமல் அவர் தாக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்து கேட்க சென்ற மகன் ராமரை கத்தியால் கையிலும் வயிற்றிலும் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குற்றவாளிகளான மதன் குமார்,கார்த்திக்,முனியாண்டி மூவரையும் கைதுசெய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தாக்கப்பட்ட ராமர் டாடா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.