கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன.இந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் மக்களின் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விட்டுள்ளது.இந்த கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தை முறையாக செலுத்தவில்லை என்று தெரிகிறது. எனவே நகராட்சி கடைகளின் உரிமையாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அளித்தும் முன்னெச்சரிக்கை அளிக்கப்படும் கடை வாடகை பணம் செலுத்தாததினால் நகராட்சி ஆணையாளர் கே பாலு அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நடவடிக்கையால் 12 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. உடனடியாக நகராட்சிக்கு கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தை வசூலிப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார் நகராட்சி ஆணையாளர் பாலு அவர்கள்.
இதனால் வால்பாறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.