வால்பாறை அரசு கலைக் கல்லூரியின் அருகே வன விலங்குகள்!! உயிர் பயத்துடன் சென்றுவரும் மாணவவ மாணவியர்கள்!!!

வால்பாறை

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரிக்கு வால்பாறை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவர்களது மகனையோ மகளையோ மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்து கல்லூரி படிப்பையும் படிக்க வைக்க அனுப்புகிறார்கள்.

அப்படி கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது ஏனென்றால் கல்லூரியின் பின்பகுதியில் புதர் மண்டி கிடக்கிறது இந்த புதருக்குள் வனவிலங்குகள் புருந்து தஞ்சம் அடைந்து கொள்கின்றன.அப்படி உள்ளே புகுந்து கொண்டிருந்தால் வெளியே இருந்து பார்ப்பதற்கு தெரியாது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுபோன்ற சமயங்களில் மாணவ மாணவியர்கள் புதரின் அருகில் சென்றாலோ அல்லது புதரில் இருந்து வெளிப்படும் வன விலங்குகள் மாணவ மாணவிகள் நிறைந்துள்ள கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து விட்டாலோ நிலைமை விபரீதம் ஆகிவிடும்.

எனவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்கவும் மாணவ மாணவியரின் பயத்தைை போக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் புதர்களை முற்றிலுமாக அகற்றி வனவிலங்குகள் புகுந்து தங்கிக் கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றவும் மற்றும் வனவிலங்குகள் அப்பகுதியில் தஞ்சம் அடையாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp