வால்பாறை அருகே சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்!!

வால்பாறை அருகே

வால்பாறை அருகே

வால்பாறை அருகே சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்!!

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் உட்கோட்டம் வால்பாறை வனச்சரகத்தில் நகராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு பகுதியில் கருமலை எஸ்டேட் உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவ மாணவிகளுக்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு பயின்று வரும் பள்ளி மாணவ மாணவிகள் அரசின் மதிய உணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக உணவு சமைக்கும் கூடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் உணவு சமைக்கும் கூடாரத்தை யானை கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் இயங்கி வரும் சமையல் அறையின் உடைத்து சேதமடைந்த பகுதியை வால்பாறை நகர்மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம், நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், அன்பரசு மற்றும் சத்துணவு ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டு அதை உடனுக்குடன் சீர் செய்து தந்துள்ளதால் பொதுமக்கள் நகர்மன்ற தலைவருக்கு நன்றி கூறியுள்ளார்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp