NALAIYA VARALARU
விஷம் குடித்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் மரணம்!!!
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுக் காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55). இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணி மேற்பார்வையாளர் பணியை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை மேற்பார்வையாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க, பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி பணம் கேட்டதாகவும், இதற்கு சுடலைமாடன் மறுத்ததால், அவரை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் மனம் உடைந்த சுடலைமாடன் கடந்த 17-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ம.வெங்கடேசன் நேற்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுடலைமாடன் இறந்தார். இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.