வீடு புகுந்து திருட முயன்ற பட்டதாரி பெண்!
பர்தா வேடமணிந்து கவனத்தை திசை திருப்ப முயற்சி!!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த, பி. கே புதூர், சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், இவரது மனைவியும் வழக்கம்போல் நேற்று, பணிக்கு சென்று விட்டனர், அப்போது சிவக்குமாரின் தாய் கமலம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பிற்பகலில் பர்தா அணிந்து வீட்டிற்குள் நுழைந்த பெண் ஒருவர், வீட்டிலிருந்த பீரோவை திறந்து திருட முயன்றதாக தெரிகிறது. இதனால் கமலம் சத்தம் போட்டுள்ளார், உடனடியாக அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறி தப்ப முயன்றபோது, கமலத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்த, நாகராஜ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து அப்பெண்ணை மடக்கிப் பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விசாரணையில் பிடிபட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரது மனைவி அனிதா என்பதும், பட்டதாரியான அனிதா ஐடி நிறுவனத்தில் பணியாற்றி விட்டு தற்போது வீட்டிலிருந்து குழந்தைகளை கவனித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து பீரோவிலிருந்த நகைகளைத் திருட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.