வெள்ளமடம் அரசு பள்ளி அருகே பேரி கார்டு வைக்கப்பட்டது சமூக பொதுநல இயக்கம் மற்றும் ஷைன் அறக்கட்டளை யின் முயற்சி வெற்றி!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வெள்ளமடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவ மாணவியர் கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் நேரிட்டது. இது தொடர்பாக குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் மற்றும் ஷைன் அறக்கட்டளை தலைவர்.P.சார்லஸ் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.

இதையடுத்து காவல்துறை உடனடி நடவடிக்கையின் பேரில் குறிப்பிட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் பேரிகார்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

ஷைன் அறக்கட்டளை கோரிக்கையின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினருக்கு ஷைன் அறக்கட்டளை நன்றி தெரிவிக்கிறது. மேலும் குறிப்பிட்ட பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ மாணவியர் நலன் பாதுகாத்திட போக்குவரத்தை ஒழுங்குபடுத்திட போக்குவரத்து காவலர் நியமிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. ஷைன் அறக்கட்டளை, வெள்ளமடம், வேம்பத்தூர் காலனி.

செய்தியாளர்
-L.இந்திரா வீரபாகு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp