வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை தண்டனை தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

வட மாநில

தமிழகத்தில் வட மாநிலத்தவர் ஹிந்தி பேசியதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 பேர் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வேகமாக பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதே சமயம் வட இந்தியாவில் இருந்து வெளியாகும் செய்தி நிறுவனங்கள் இது குறித்து செய்திகள் வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்செய்தியின் எதிரொலியாக
தமிழகத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக அதிக அளவில் வடமாநிலத் தொழிலாளர்கள்

ரயில் நிலையங்களுக்கு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் வருகின்ற 7ஆம் தேதி நடைபெற உள்ள ஹோலி பண்டிகைக்காக வடமாநிலத்தவர் தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது சம்பந்தமாக தேவையில்லாமல் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp