NALAIYA VARALARU
10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!!
இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. மும்பையில் கடந்த 17ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் மிட்செல் ஸ்டாக் பந்துவீச்சில், கில் ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா 13, சூர்யகுமார் யாதவ் 0, கே.எல்.ராகுல் 9 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். விராட் கோலி மட்டும் சற்று தாக்கு பிடித்து 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 117 ரன்களுக்கு சுருண்டது. அக்சர் படேல் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை மிட்செல் ஸ்டாக் 8 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து 118 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியாக விளையாடினர். இவர்களது விக்கெட்களை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் எடுத்த முயற்சி பலன் தரவில்லை. இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். 11 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டாக் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.