கோவையை சேர்ந்த அருண்பாபு 350 க்கும் மேற்பட்ட குழம்பு மற்றும் கிரேவி வகைகளை செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் அருண்பாபு.சாய்பாபாகாலனியில் உள்ள ஹாஸ் சிக்ஸ் நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையல் கலை நிபுணராக உள்ள இவர்,சாஸ்தா கேட்டரிங் எனும் உணவு தயார் செய்து வழங்கும் சேவையையும் நடத்தி வருகிறார். குழம்பு மற்றும் கிரேவி வகைகளை வேகமாக செய்வதில் தனித்திறமை கொண்ட அருண்பாபு,. இதில் புதிய உலக சாதனை புரிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.அதன்படி, ஆறு மணி நேரத்தில் 350 க்கும் மேற்பட்ட குழம்பு மற்றும் கிரேவி வகைகளை செய்து அசத்தியுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் செட்டிநாடு,சவுத் மற்றும் நார்த் இந்தியன்,சைனீஸ் சைவம் மற்றும் அசைவ மல்ட்டி குஸைனாக செய்துள்ளார்.குறிப்பாக ஒரே இடத்தில் ஹைதராபாதி,ஹன்சாய்,பஞ்சாபி,மலாய்,தாய்,செட்டிநாடு, கேரள மலபார் என மல்ட்டி குசைனில் ,மட்டன்,சிக்கன்,மீன் மற்றும் முட்டை,இறால் கிரேவி,குழம்புகளை சமைத்துள்ளார்.அதே போல சைவ வகையில், பூண்டு கார குழம்பு,மிளகு மோர்,சாம்பார்,.என 350 க்கும் மேற்பட்ட கிரேவி குழம்பு வகைகளை செய்த இவரது சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது…சமையல் கலையில் புதிய சாதனை செய்த அருண்பாபுவிற்கு நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் பரிந்துரையின் பேரில் தீர்ப்பாளர் சிவமுருகன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
-சீனி போத்தனூர்.