NALAIYA VARALARU
அதிக அளவில் கொரோனா பரவல்- முக கவசம் கட்டாயம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாட்டில் 469, புதுச்சேரியில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் இனி முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.