NALAIYA VARALARU
அழைத்தவுடன் களத்தில் இறங்கும் வால்பாறை தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பாம்புகள் புகுந்து அச்சுறுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கொடிய விஷம் உள்ள பாம்பு ஒன்று கட்டிடங்களுக்குள் நுழைய முயன்றது அதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் உடனடியாக வந்து கட்டிடங்களுக்குள் நுழையும் முயன்ற பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே போன்று படக்குத்துறை இல்லம் அருகே ஒரு பாம்பு புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக வந்து பாம்பை பிடித்தனர். பொதுமக்கள் அழைத்தவுடன் காலதாமதமின்றி உடனடியாக வந்து மக்கள் பணியாற்றி வரும் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.