NALAIYA VARALARU
கடுமையான குடிநீர் பற்றாக்குறை! – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கோடைகாலத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. பல வார்டுகளில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக
மேடான பகுதிகளுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை இந்த குறைப்பாட்டை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்பட்ட வேண்டும்.குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்களையும் நேரத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடம் முறையாக நேரடியாக தெரிவிக்கவேண்டும்.
மேலும் இந்த கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் கேன் வாட்டரை நாடுகின்றனர். பல கேன் வாட்டர்கள் சுத்திகரிக்கப்படாமல் தரமற்ற முறையில் உள்ளதுடன் கோடையின் தன்மையை காரணம் சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன்கருதி நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமே தரமான கேன்வாட்டரை நியாயவிலையில் வழங்கிட மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் உள்ள தெருக்களில் குடிநீர் இணைப்புக்காக பெயர்த்து எடுக்கப்பட்ட அலங்கார கற்கள் மீண்டும் பதிக்கப்படாதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளின் தெருக்களின் அலங்கார கற்கள் சரிவர பதிக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
இந்த கோரிக்கை மனுவினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமரிமாவட்ட செயலாளர் தோழர்.தா.சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நேரடியாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு.ஆனந்த மோகன் (இ.ஆ.ப) அவர்களிடம் வழங்கினார்கள். அவருடன் தோழர்.S.நாராயணசாமி,Cpi மாவட்டத்துணைசெயலாளர், தோழர்.சுந்தரம் துணைசெயலாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,தோழர்.நாகராஜன் Cpi, மாநகர பொருளாளர், தோழர்.கல்யாண சுந்தரம் Cpi தாலுகா செயலாளர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.