கோவை கரும்புக்கடை அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கைது!!

கோவை கரும்புக்கடை

NALAIYA VARALARU

கோவை கரும்புக்கடை அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கைது!!

கோவை மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு போலீசார் கோவை கரும்புக்கடை திப்பு நகரில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு அஜீஸ் என்பவரது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போத்தனூரை சேர்ந்த வேலுமணி என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது தானும் கரும்பு கடை சாரமேடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பவரும் கூட்டாக தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை கரும்புக்கடை சாரமேடு பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை ஒப்பு கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட, 20 ரேஷன் அரிசி மூட்டைகள் என மொத்தம் 1000 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து வேலுமணி என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp