தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதைப் போலவே, சிங்கம்புணரியிலும் வெப்பநிலை அதிகரித்தே உள்ளது.
இந்நிலையில், இன்று (02/04/23) மதியம் சற்று முன் சிங்கம்புணரி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் வைசியா வங்கியின் எதிரில் உள்ள, பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆலோசனை மையத்துக்கு அருகில் உள்ள காலி இடத்தில் கிடந்த மரக்கட்டைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தகவலறிந்து விரைந்து வந்த சிங்கம்புணரி தீயணைப்புத்துறையினர், பற்றி எறிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீப்பிடித்த இடத்திற்கு அருகில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆலோசனை மையமும், ஒரு டயர் ஷோரூம் மற்றும் புதிய இருசக்கர வாகனங்கள் ஷோரூம் ஒன்றும் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு தீயணைப்புத்துறையினர் விரைந்து நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.