திடீர் வெள்ளப்பெருக்கு!! வால்பாறை கூழாங்கல் ஆற்றின் மையப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிப்பு!!!

திடீர் வெள்ளப்பெருக்கு

NALAIYA VARALARU

திடீர் வெள்ளப்பெருக்கு!!வால்பாறை கூழாங்கல் ஆற்றின் மையப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவிப்பு!!!

கோவை மாவட்டம் வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து வால்பாறையின் எழில் மிகுந்த தோற்றங்களையும் இயற்கையின் மாயாஜாலங்களையும் கண்டு ரசித்துச் செல்கின்றனர். தற்பொழுது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெறித்து வருகிறது. திடீரென்று மழையும் பெய்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சூழ்நிலையில் வால்பாறைக்கு சுற்றுலா வருபவர்கள் ஆபத்தை உணராமல் அபாயகரமான செயல்களின் ஈடுபட்டு வருகின்றனர். வன விலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகளில் நின்று செல்பி எடுப்பது நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் செயல்படுவது என்று உள்ளனர். நமக்குத் தெரியாத பழக்கம் இல்லாத இடங்களுக்கு சென்று அங்குள்ள நீர்நிலைகளில் இறங்கவோ குளிக்கவோ முற்பட்டால் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.

 

இது போன்று வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகளில் சிலர் கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளனர். ஆற்றில் இறங்கி குளிக்கவும் செய்துள்ளனர் அதில் சிலர் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்று செல்ஃபி எடுத்துள்ளனர். வால்பாறையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும் அதனால் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓட ஆரம்பித்து விடும்.இந்த ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று ஆற்றில் இறங்கி ஆற்றின் மையப் பகுதிக்கு சென்று விடுகின்றனர் ஆனால் திடீரென்று கன மழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது அவர்களால் மையப்பகுதியில் இருந்து கரைக்கு திரும்புவது என்பது ஆபத்தான காரியமாக முடிந்து விடுகிறது. இதுபோன்று நேற்றும் சிலர் கூலாங்கல் ஆற்றின் மையப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.

அதன்பிறகு தீயணைப்பு துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கயிறு கட்டி மையப்பகுதியில் இருந்தவர்களை மீட்டுள்ளனர்.எனவே இதுபோன்று இனிமேலும் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp