NALAIYA VARALARU
திருப்பூரில் கொடூரம்.! வீட்டில் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு! 2 வாலிபர்கள் கைது.!
திருப்பூர் மாவட்டம் ராக்கிபாளையம் சின்னசாமி காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சூரியகுமார் (28). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சூரியகுமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்றுள்ளனர். அப்பொழுது சூரியகுமார் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பின்பு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார். மேலும் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (29) என்பவரும் சிறுமியை கற்பழித்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக இரண்டு பேரும் சிறுமியை மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இரண்டு பேரும் சிறுமியை தனியாக அழைத்து அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர் நடந்த கொடுமையை கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சூரியகுமார் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.