NALAIYA VARALARU
தூத்துக்குடியில் 40 ஆண்டுகளாக பட்டா இல்லாத கிராமம் !!!
தூத்துக்குடி மாவட்டம் மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட மினி சகாயபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிறுபான்மை மீனவர் சமுதாய மக்கள் குடியிருந்து வருகிறார்கள். மீனவர் சமுதாய மக்கள் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பு இலாக்காக்கு உள்ள இடத்தில் சுமார் 40 ஆண்டுகளாக நிரந்தரமாக குடியிருந்து வருகிறார்கள். அந்த மக்கள் அனைவரும் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இங்கு 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்து வருகிறார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரி, சொத்து வரி, மின்சார வரி தண்ணீர் வரி, அனைத்து வரிகளையும் தீர்வையும் செலுத்தி சர்வ சுதந்திரமாக வசித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மினி சகாயபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர், வேலை நகர், அரசன் மில் , லயண்ஸ் டவுண் , ஆகிய பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மக்கள் நலனில் அதிக அக்கறை உள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தாங்கள் தயவு கூர்ந்து இந்த மீனவர் சமுதாய மக்களின் குடியிருப்பு வாழ்வாதாரத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட பாஜக எஸ்.டி அணி பால சந்திர பூபதி அவர்கள் மனு அளித்தார்.
ஏன் பட்டா வேண்டும் :
பட்டா இல்லாவிட்டால் என்னவாகும். ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தைப் பலருக்கும் விற்கும் காலம் இது. அவ்வாறு சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது. இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். ஒரு சொத்தைப் பதிவு செய்யும் நபர், அதைப் பட்டாவாக மாற்றிக்கொண்டுவிட்டால், அந்தப் பிரச்சினை இருக்காது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.