NALAIYA VARALARU
பறவைகள் பூங்காவாக மாறும் வ.உ.சி. உயிரியல் பூங்கா!!
கோவை மாநகரில் முக்கிய பொழுது போக்கு தலமாக வ.உ.சி. உயிரியல் பூங்கா விளங்கி வந்தது. இந்த நிலையில் உயிரியல் பூங்கா செயல்பட போதிய இடவசதி இல்லை என்று கூறி, மத்திய அரசு இதற்கான அனுமதியை ரத்து செய்துவிட்டது. இதையடுத்து கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டது. பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் உயிரியல் பூங்காவை, பறவைகள் பூங்காவாக மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பறவைகள் பூங்காவிற்கு சிறிய வகை வெளிநாட்டு பறவைகளை இங்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள கூண்டுகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு, பறவைகள் பூங்காவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.