NALAIYA VARALARU
பழைய புரோட்டாவினால் அவதிப்படும் சுற்றுலா பயணிகள் மற்றும் வால்பாறை பகுதி பொதுமக்கள்!!
கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர அனைத்து உணவகங்களிலும் முதல் நாள் தயார் செய்த உணவுகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து மறுநாள் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பள்ளி செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் உடல் உபாதை மற்றும் வயிற்று வலியினால் வேதனை அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நகராட்சி நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் சோதனை மேற்கொண்டு உணவகங்களில் தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் தரத்தை பரிசோதித்து பொது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறிப்பாக ரெடிமேட் புரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவை நல்ல முறையில் தரமாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.