மரணம் நெருங்கிவிட்டதை அறிந்த டாக்டரின் கண்கலங்க வைத்த கதை!!
மரணித்து விடுவோம் என்று முன்கூட்டியே தெரிந்தபின், மனைவியுடன் விவாகரத்து பெற்று பொருளாதார வசதிகளை செய்து கண் கலங்க வைத்த ஒரு டாக்டரின் கதை…
மரணம் நிச்சயம் என்று தெரிந்த பிறகு தனது மனைவி ஆதரவு இல்லாமல் ஆகிவிடக் கூடாது என்று கருதி அவருக்கு விவாகரத்து கொடுத்து பொருளாதார வசதிகளை செய்து கொடுத்த டாக்டர் ஹர்ஷவர்தன்.
தெலுங்கானா மாநிலம் கமம் நகரை சேர்ந்தவர் 34 வயது ஹர்ஷவர்தன். இவர் எம்.பி.பி.எஸ் படித்து ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியில் இருந்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஹேமா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
முதலில் அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார் மனைவியை அடுத்து அழைத்துச் செல்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஹர்ஷவர்தன் ரத்த வாந்தி எடுத்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.
தொழில் ரீதியாக டாக்டர் ஆன அவருக்கு, தான் இரண்டு ஆண்டுகளில் மரணம் அடைந்து விடுவோம் என்பது அப்போதே தெரிந்துவிட்டது. எனினும் ஆஸ்திரேலியாவில் தரமான சிகிச்சை கிடைப்பதால் அங்கேயே தங்கி இருந்தார். தனக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த ஹர்ஷவர்த்தனுக்கு தான் இறந்துவிட்டால் மனைவி ஆதரவு இல்லாமல் ஆகி விடுவாரே என்ற கவலை ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவருடைய வருங்கால வாழ்க்கை பாதிக்கப்படுமே என்றும் வேதனைப்பட்டார். தொடர்ந்து தன் மனைவியை சமாதானப்படுத்தி தன்னிடத்தில் இருந்து விவாகரத்து பெற வைத்தார். மேலும் தன் மனைவியின் வருங்கால வாழ்க்கைக்கு தேவையான பொருளாதார வசதிகளையும் செய்து கொடுத்தார்.
இது தவிர தன்னுடைய உடல்நிலை பற்றி வக்கீல் ஒருவர் மூலம் தெரிவித்த ஹர்ஷவர்தன் தான் இறந்த பின் தன்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்குரிய விமான கட்டணம் முழுவதையும் செலுத்தி இருந்தார். இது தவிர தன்னுடைய உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்தக்கூடிய சவப்பெட்டி ஒன்றையும் மூன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தயார் செய்தார்.
இடையே குடும்பத்தாருடன் வீடியோ கால் மூலம் பேசி பெற்றோர் உறவினர்கள் ஆகியோரை ஆறுதல் படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஹர்ஷவர்தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். பின்னர் அவரின் உடல் இந்த மாதம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மரணத்தை தைரியமாக எதிர் கொண்ட டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு கண்ணீர் அஞ்சலி..
-இளம் தந்தி.