வால்பாறையில் விளையாட்டு திடல் அருகே உலா வந்த சிறுத்தைகள்!! பீதியில் உறைந்த மாணவர்கள்!1!

விளையாட்டு

NALAIYA VARALARU

வால்பாறையில் விளையாட்டு திடல் அருகே உலா வந்த சிறுத்தைகள்!!
பீதியில் உறைந்த மாணவர்கள்!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதிகளில் நீதிமன்றம், அரசு ரேஷன் அரிசி குடோன், அரசு மண்டபம், படகு இல்லம் மற்றும் அரசு கலைக் கல்லூரி வால்பாறை நகராட்சி ஆணையர் தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் புதர்கள் அதிக அளவு உள்ளது.
இந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகும்.
இது போன்று புதர் சூழ்ந்த பகுதிகளில் சிலர் கோழி கழிவுகளை கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த புதர் மண்டி கிடக்கும் பகுதிகளில் இருந்து வீசும் கோழிக் கழிவுகளால் ஈர்க்கப்படும் வனவிலங்குகள் புதர்களுக்குள் புகுந்து அதனை சாப்பிட முயல்கின்றன இதனால் புதருக்குள் மறைந்திருக்கும் வனவிலங்குகள் வெளியே வந்தால் பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இது பற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சூழ்நிலையில் தான் தற்பொழுது பகல் நேரங்களிலேயே சிறுத்தைகள் புதரின் அருகே நடமாட தொடங்கியுள்ளன. தற்பொழுது கலை கல்லூரியின் விளையாட்டு திடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பகல் நேரங்களிலேயே விளையாட்டு திடலின் அருகே இருக்கும் புதரில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டு அருகில் உள்ள பொதுமக்கள் சப்தம் எழுப்பி உள்ளனர் அதனைக் கண்டு மாணவர்கள் பயத்தால் அந்த இடத்தை விட்டு சென்று உள்ளனர்
எனவே விபரீதம் ஏதாவது நடக்கும் முன்னரே இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றினால் பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள்.


உடனடியாக இந்த புதர்களை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp